தமிழ், தெலுங்கில் புதிய படம் நடிக்கும் சமுத்திரக்கனி

தமிழ், தெலுங்கில் புதிய படம் நடிக்கும் சமுத்திரக்கனி

தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அப்பா மகன் என்ற உணர்வுபூர்வமான கதையில் உருவாகும் இத்திரைப்படம், இதுவரை யாரும் சொல்லப்படாத தனித்துவமான கதையைக் கொண்டு உருவாகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தன்ராஜ் மற்றும் சமுத்திரக்கனி அப்பா, மகனாக நடிக்க, மோக்‌ஷா, ஹரிஸ் உத்தமன், பிரித்வி, அஜய் கோஷே, லாவண்யா, ராக்கெட் ராகவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. டியர் காம்ரேட் பட இயக்குநர் பரத் மற்றும் இயக்குநர் சுப்பு ஆகியோர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர். 

தமிழ், தெலுங்கில் புதிய படம் நடிக்கும் சமுத்திரக்கனி

ஐதராபாத்,  சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் முதல் தோற்றம் வௌியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

Share this story