பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு...

ajaz khan

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்தி நடிகர் அஜாஸ் கான் மீது மும்பையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் பிக்பாஸ் மூலமாக பிரபலமான அஜாஸ் கான், 'ஹவுஸ் அரெஸ்ட்' என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். உல்லு ஆப்பில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த ஷோவின் புரோமோ வீடியோ வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இந்த சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் சீர்குலைக்கும் காட்சிகள் இடம் பெற்ற நிலையில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த ஷோ ஒளிபரப்பு செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ajaz khan

இந்த நிலையில், ஹவுஸ் அரெஸ்ட் தொடரில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக இளம்பெண் ஒருவரிடம் அஜாஸ் கான் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அஜாஸ் கான், பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய மகாராஷ்டிராவின் சர்கோப் காவல் நிலைய அதிகாரிகள், நடிகர் அஜாஸ் கான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.குற்றச்சாட்டுகள் குறித்து காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே, வலைத்தொடரில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றது குறித்து அஜாஸ் கான் வரும் 9 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
பாலிவுட்டில் பிக்பாஸ் மூலமாக பிரபலமான அஜாஸ் கான், 'ஹவுஸ் அரெஸ்ட்' என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். உல்லு ஆப்பில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த ஷோவின் புரோமோ வீடியோ வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. இந்த சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் சீர்குலைக்கும் காட்சிகள் இடம் பெற்ற நிலையில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த ஷோ ஒளிபரப்பு செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story