"அந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்" -நடிகை ஷ்ரேயா ஆவேசப்பட என்ன காரணம் ?

shreya saran
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண் ஒரு பரபரப்பு பதிவு போட்டுள்ளார். அதில் அவரது பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு மக்களை ஏமாற்றும் வேலை நடப்பதாக பதிவு செய்துள்ளார். அந்த போலி இன்ஸ்டா கணக்கில் பணத்தும் செலுத்தும் ஒரு ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. அதில் ரசிகர்கள் பணம் செலுத்தி தனது புகைப்படங்கள், போட்டோக்களை பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரேயா கூறியது: மற்றொருவரை போல நடிக்க வேண்டாம், உங்கள் வாழ்க்கையை பாருங்கள். போலி மெசேஜ் அனுப்பிய முட்டாள் யார் என தெரியவில்லை. இந்த முட்டாள் யார்? தயவுசெய்து மக்களுக்கு எழுதுவதையும் நேரத்தை வீணடிப்பதையும் நிறுத்துங்கள். துரதிர்ஷ்டவசமாக இது விசித்திரமானது. மக்களின் நேரத்தை வீணடிப்பதில் நான் வருத்தப்படுகிறேன். இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த மோசமான நபர் நான் போற்றும் மற்றும் வேலை செய்ய விரும்பும் நபர்களை அணுகுகிறார். அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதிரியான நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இது தொடர்பாக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு ஸ்ரேயா கூறியுள்ளார்.

Share this story