‘பத்து தல’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி படக்குழுவினரோடு கொண்டாடிய சிம்பு !

 Pathu Thala

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்றுள்ளது. 

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். 

 Pathu Thala

இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘சில்லன்னு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக  இப்படம் உருவாகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

 Pathu Thala

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை விஜிபி கோல்டன் பீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு இன்று நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி சிம்பு மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Share this story