பிரம்மாண்ட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிம்பு... ‘STR 49‘ புதிய அப்டேட்

str 49

 பிரம்மாண்ட இயக்குனர் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘மாநாடு‘, ‘வெந்து தணிந்தது காடு‘, ‘பத்து தல’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிம்பு, தற்போது கமலஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். 

str 49

சிம்புவின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் ப்ரீயட் படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மாதம் தொடங்கவுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஐந்து மொழியில் பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.‌ 

str 49

இந்நிலையில் 49வது படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி பிரம்மாண்ட இயக்குனராக மணிரத்னம் சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மத்தியில் துவங்கவுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. 

 

 

Share this story