மிரட்டவுள்ள 'பத்து தல' சிம்பு...சென்சார் குறித்த முக்கிய தகவல் !

pathuthala

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. 

 சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பத்து தல'. ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மாஸான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்ஊ டிரெய்லரில் சிம்புவின் வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும்  அதிகரித்துள்ளது. 

pathuthala

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கெளதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று 2மணி நேரம் 32 நிமிடங்கள் இந்த படம் ஓடும் என்று கூறப்பட்டுள்ளது. 

Share this story