சிம்புவின் ‘கொரானா குமார்’ கைவிடப்பட்டதா ?... வெளியானது புதிய தகவல் !

simbu

சிம்புவின் ‘கொரானா குமார்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் சிம்பு. சில ஆண்டுகள் நடிப்புக்கு இடைவெளி விட்ட அவர், ‘ஈஸ்வரன்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஈஸ்வரன் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இந்த இரண்டு படங்களிலும் மிரட்டலான நடிப்பை சிம்பு வெளிப்படுத்தியிருந்தார். 

simbu

இந்த படத்தையடுத்து ‘பத்து தல’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்து ‘கொரானா குமார்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கோகுல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகயிருந்த ‘கொரானா குமார்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் சில முன்னணி இயக்குனர்களின் படங்களில் சிம்பு நடிக்கவுள்ளாராம். அடுத்த மாதம் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாம். இது குறித்த தகவல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

 

Share this story