தில் ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன்... உண்மை என்ன ?

sivakarthikeyan

வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வந்த தகவல் முற்றுலும் தவறானது என தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகராக சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ படத்தின் மூலம் முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமானார். கடந்த மாதம் வெளியான இப்படம் போதிய வெற்றியை பெறவில்லை. இந்த படத்திற்கு தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

sivakarthikeyan

இந்த படத்தை முடித்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இதையடுத்து ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. 

இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும், ஆனால் 27 கோடிக்கு ரூபாய்க்கு சம்பளம் பேசி முடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தில் ராஜூவின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வந்த தகவல் வெறும் வதந்தி என்றும், இன்னும் எதுவும் உறுதியாகவில்லை என்று தகவல் கசிந்துள்ளது. 

.

 

Share this story