பராசக்தி படப்பிடிப்புக்காக இலங்கைக்கு சென்ற சிவகார்த்திகேயன்...!
பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கை சென்றுள்ளார்.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி வரும் பராசக்தி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கினறனர். மேலும் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்றது.
#Sivakarthikeyan is off to Srilanka for the Next Schedule of #Parasakthi ..🔥 Shoot happening in Jet Speed..⭐🤝
— Laxmi Kanth (@iammoviebuff007) March 8, 2025
pic.twitter.com/6q6HYMI6GX
மேலும், பின், முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாக சுதா கொங்காரா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பராசக்தியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கைக்கு சென்றுள்ளார். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் விராலி வருகிறது.

