முதலில் இருந்து ஆரம்பிக்கும் சிவகார்த்திகேயன்.. ‘மாவீரன்’ படத்தின் அதிர்ச்சி செய்தி
![maaveeran](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/f76d5ca6b5fb47eefb0c57593ae38a3a.jpg)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் படத்தின் அதிர்ச்சி செய்து ஒன்று வெளியாகியுள்ளது.
‘பிரின்ஸ்’ படம் போதிய வெற்றியை பெறாத நிலையில் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமுடன் நடித்து வருகிறார். ‘மாவீரன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. நடுவில் படம் உருவாகும் விதத்தில் சிவகார்த்திகேயனுக்கு திருப்தியில்லை என்று கூறப்பட்டது. அதனால் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து அதிர்ச்சி தரும் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளில் சிவகார்த்திகேயன் திருப்தியடையவில்லை என கூறப்படுகிறது. அதனால் படத்தை முதலில் இருந்து புதிய கதையில் எடுக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.