பண்டிகை நாளில் வெளியாகும் 'மாவீரன்'... சிவகார்த்திகேயனின் செம்ம ப்ளான் !

maaveeran

 சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

‘பிரின்ஸ்’ திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் எப்படியாவது அடுத்து ஒரு வெற்றியை கொடுத்தாகவேண்டும் என்ற வெறியுடன் பணியாற்றி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் ‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ‘மாவீரன்’ படத்தில் வேகமாக பணியாற்றி வருகிறார் சிவகார்த்திகேயன்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

maaveeran

இன்னும் 15 நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறும் என கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை வரும் பக்ரீத் பண்டிகையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இப்படத்தின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

 

Share this story