காஷ்மீர் ஷூட்டிங் நிறைவு.. சென்னை திரும்பிய சிவகார்த்திகேயன் !

sk21

 காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவுபெற்றதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை திரும்பியுள்ளார். 

'மாவீரன்'  படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். 'எஸ்கே 21' என்று அழைக்கப்படும் இந்த படத்தை  கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. 

sk21

இப்படத்தை ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். ராணுவ கதைக்களம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வட இந்தியாவில் நடைபெற உள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை திரும்பியுள்ளார். 

Share this story