நடிகை கௌதமி கொடுத்த புகாரில் பேரில் 6 பேர் கைது
1703165320291

நடிகை கௌதமி, தனக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் உறவினர்கள் அபகரித்ததாக புகார் அளித்திருந்தார். இதுகுறித்து, குறித்து சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்படி, சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் விசாரணைக்கு சென்ற காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இதனிடையே தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உட்பட 6 பேரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்தனர். இந்நிலையில், கேரளாவில் வைத்து அழகப்பன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.