“அமீரின் நேர்மையை எடைப்போடும் தகுதி எவருக்கும் இல்லை”- கவிஞர் சினேகன்.

photo

பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சனையில், இயக்குநர் அமீருக்கு, கவிஞர் சினேகன் ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

18 ஆண்டுகள் கழித்து பருத்திவீரன் பட இயக்குநர் அமீர் மற்றும் அப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே உள்ள பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சமுத்திரகனி, சசிகுமார், சுதாகொங்காரா, நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் அமீருக்கு ஆதரவாகவும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராகவும் கண்டனத்தை பதிவு செய்தும் உள்ளனர். இந்த நிலையில் தற்போது பாடலாசிரியர் சினேகனும் அமீருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

அதாவதுநான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும். “ என பதிவிட்டுள்ளார்.

Share this story