இன்று முதல் தென்னிந்திய அவுட்டோர் யூனிட் வேலை நிறுத்தம் அறிவிப்பு...

சென்னையில் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது.
தங்களது அமைப்பில் உள்ள சில நிறுவனங்களுக்கு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான பெஃப்சி (FEFSI) லைட் மேன்களை அனுப்புவதில்லை என தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் புகார் அளித்திருந்தது. இந்த நிலையில், பெஃப்சி உடன் சுமூகத் தீர்வு காணும் வரை சென்னையில் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது.
இதனால் சென்னையில் நடைபெறும் திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரம் மற்றும் இணையத் தொடர் உள்ளிட்ட அனைத்துப் படப்பிடிப்புகளுக்கும் இன்று முதல் அவுட்டோர் யூனிட்டுகள் அனுப்பப்பட மாட்டாது என்றும் சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் படப்பிடிப்புகள் நடைபெறும் எனவும் அந்த அமைப்பின் செயல் தலைவர் மார்க்கஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான பெஃப்சி (FEFSI) இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க இருக்கிறது.