குறை சொல்வதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி உதவுங்கள் - தங்கர் பச்சான்

குறை சொல்வதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி உதவுங்கள்  - தங்கர் பச்சான்

சென்னையில் மிச்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வகையிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறை சொல்வதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி உதவுங்கள்  - தங்கர் பச்சான்

இந்நிலையில், அரசை குறை சொல்வதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி உதவுங்கள் என இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உச்ச நடிகர்கள் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை உடனே செய்தால்தான்  உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Share this story