48-வது திரைப்படத்தில் தீவிரம் காட்டும் சிம்பு

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 48-வது திரைப்படத்தில் நடிகர் சிம்பு தீவிரம் காட்டி வருகிறார்.
முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படம் சிம்புவின் 48-வது திரைப்படம் ஆகும். இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் சிம்புவும், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் சந்தித்து பேசும் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நீண்ட தலைமுடியுடன் காட்சி அளிக்கும் சிம்புவின் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.