கிரிக்கெட் பார்க்க மும்பை பறந்தார் ரஜினிகாந்த்

கிரிக்கெட் பார்க்க மும்பை பறந்தார் ரஜினிகாந்த்

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170-வது படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்கி நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தில் மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கின்றனர். துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இது தவிர, ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் படத்தில் இணைந்துள்ளார். 

கிரிக்கெட் பார்க்க மும்பை பறந்தார் ரஜினிகாந்த்

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் நடைபெற உள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை பறந்துள்ளார். 

Share this story