ரிலீசுக்கு முன்னரே 100 கோடி வசூல்... மிரட்டும் 'சூர்யா 42'... அட்டகாசமான அப்டேட்
'சூர்யா 42' திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே வசூலை குவித்து வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. 'சூர்யா 42' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 5 வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகும் இப்படம் மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தின் இந்தி திரையரங்கு உரிமை, சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை பென் ஸ்டுடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த உரிமை சுமார் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு முன்னரே 'சூர்யா 42' கோடிகளை குவித்து வருவது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.