சென்னையில் ‘சூர்யா 45’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

surya 45

சூர்யா 45 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இப்படம் இந்த ஆண்டு கோடையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தினை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜி கே விஷ்ணு இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா தவிர திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, ஷிவதா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

surya

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை இயக்குனர் ஆர் ஜே பாலாஜியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி பிரசாத் லேபில் நீதிமன்றம் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story