அடந்த காடுகளில் படமாகும் சூர்யாவின் ‘கங்குவா’.... சுவாரஸ்சியமான தகவல்கள் !

ganguva

 சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாவது பாகமும் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.  இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். 

ganguva

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. 

ganguva

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அங்கு தாண்டிக்குடி என்ற பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வரும் மே 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்று விரைவில் ப்ரோமோ ஒன்றை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. 

Share this story