கங்குவாவில் இணையும் பாலிவுட் வில்லன் நடிகர்.. அடுத்த கட்ட ஷூட்டிங் குறித்து புதிய அப்டேட்

kanguva

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஒருவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சூர்யா முதல்முறையாக 5 வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘கங்குவா’. சரித்திர கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் தென்னிந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. 

kanguva

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நட்ராஜ், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 

kanguva

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி நேற்று நள்ளிரவு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட பாங்காக்கில் தொடங்கவுள்ளது. அந்த படப்பிடிப்பில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி டியோல் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் பிரபல நடிகராக இருக்கும் அவர், இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ப்ரீயட் பகுதியில் வில்லனாக நடிகர் நட்ராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story