நாளை வெளியாகும் ‘கங்குவா’ மாஸ் அப்டேட்... கொண்டாட தயாராகும் ரசிகர்கள் !

kanguva

சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா‘ படத்தின் மாஸ் அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழில் மாஸ் நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்திற்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். 

kanguva

முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 

ப்ரீயட் கதைக்களத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்று விடும் என கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி நாளை ‘கங்குவா’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. அநேகமாக அது ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவுக்கான அறிவிப்பாக இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. 

 

Share this story