நானி தயாரித்த 'கோர்ட்' படத்தை பாராட்டிய சூர்யா - ஜோதிகா...!

நானி தயாரித்துள்ள கோர்ட்' படத்தை பார்த்த சூர்யா - ஜோதிகா படக்குழுவை பாராட்டியுள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தயாரிப்பில் அண்மையில் 'கோர்ட்' என்ற படம் வெளியானது.'கோர்ட்' படத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.மேலும், ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் முதல் நாளே உலகளவில் ரூ.10 கோடி வசூலை குவித்துள்ளது.
A warm thank you to @Suriya_offl garu & #Jyotika garu for taking time & watching our #Court movie. Your lovely gesture & appreciation made my day. Truly grateful!🤗@NameisNani @walpostercinema pic.twitter.com/ldXRGPCn2Z
— Sivaji (@ActorSivaji) April 24, 2025
இதுவரை, 'கோர்ட்' படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'கோர்ட்' படத்தை பார்த்த நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் படக்குழுவை பாராட்டியுள்ளனர். குறிப்பாக நடிகர் சிவாஜிக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.