“ஒரு கண்ணில் துணிச்சல், மறு கண்ணில் கருணை”- கேப்டன் குறித்து உருக்கமாக பேசிய நடிகர் சூர்யா.

மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சூர்யா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் வர இயலாத பலரும் வீடியோ, ஆடியோ பதிவு செய்து கேப்டனுடனான தங்கள் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா வீடியோ பகிர்ந்துள்ளார். அதில் “அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை…யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!!” என பதிவிட்டுள்ளார்.
அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை…
— Suriya Sivakumar (@Suriya_offl) December 28, 2023
யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை..
கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!! pic.twitter.com/PHeqHNG3uk