கருணைக்கொலையை மைய்யமாக வைத்து தயாரான ‘தலைக்கூத்தல்’ - படத்தின் டீசர் வெளியீடு.

photo

ஒய் நாட் ஸ்டுடியோ தயாரிப்பில், கிராமப்புறங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் ஒருவகையான கருணைக்கொலையை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் ‘தலைக்கூத்தல்’ இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை  'லென்ஸ்', 'தி மஸ்கிடோ பிலாசபி' ஆகிய படங்களை இயக்கிய ஜெய பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

photo

கிராமபுறநடை முறையில் இருக்கும் ஒரு வகை கருணைக்கொலை தான் இந்த தலைக்கூத்தல். இந்த டீசரில் இடம் பெற்றுள்ள “ இப்படி ஒரு நிலைமை உங்கள பெத்தவங்களுக்கு வந்தா நீங்க, இத செய்வீங்களா?” என்ற சமுத்திரகனியின் வசனம் சமுதாயத்தின் மீது சாட்டை அடியாக விழிகிறது. இந்த தலைக்கூத்தல் குறித்து சில படங்களில் ஒரிரு காட்சிகள்தான் வரும் ஆனால் இந்த படத்தில்தான் பிரதான் காட்சியாக வைத்து உருவாகியுள்ளது. இதனாலேயே படத்தின் மீதன எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோவில்பட்டி, குற்றாலம் அகிய பகுதிகளில்  படப்பிடிப்பு நடந்தது முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story