‘தளபதி 67’ -ல் அடுத்தடுத்த இணைந்த பிரபலங்கள்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

thalapathy 67

விஜய்யின் ‘தளபதி 67’-ல் அடுத்தடுத்த பிரபலங்கள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

thalapathy 67

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் விஜய் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது. ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பாளராகவும், மனோஜ் பரம்மஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றனர்.

thalapathy 67

இந்த படத்தின் அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்திற்காக படப்பிடிப்பிற்காக விஜய் மற்றும் படக்குழுவினர் இன்று காலை தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். நாளை படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட் உள்ளது. 

thalapathy 67

இப்படத்தின் நடிகர், நடிகைகள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி ஒரு மணி நேரத்திற்கு ஒரு அறிவிப்பு வெளியாகி வருகிறது. முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் மிஷ்கின், நடன இயக்குனர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story