அட்டகாசமாக தொடங்கிய படப்பிடிப்பு.. ‘தளபதி 67’ குறித்து முக்கிய அப்டேட் !

thalapathy

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘வாரிசு’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளது. ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் லலித் குமார்  தயாரிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். 

 thalapathy 67

பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹம்சா தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இந்த படத்தில் திரிஷா, சஞ்சத் தத், அர்ஜூன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படம் முழு நீள கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்நிலையில் முதல் கட்ட பணிகள் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இதையடுத்து 50 நாட்களுக்கு மேல் காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

Share this story