முதலில் கொடைக்கானல்.. பின்னர் காஷ்மீர்.. ‘தளபதி 67’ -ல் லோகேஷின் திட்டம் இதுதான் !

thalapathy 67

‘தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார்.  மனோஜ் பரம்ஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். இந்த படம் முழு நீள கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ளது. 

thalapathy 67

இந்த படத்தில் திரிஷா, சஞ்சத் தத், அர்ஜூன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படம் ‘கைதி’ படம் போன்று காதல் காட்சிகள், பாடல்கள் ஆகியவை இல்லாமல் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.  

தற்போது இந்த படத்தின் ப்ரோமோ ஷூட்டிற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கொடைக்கானலில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சில நாட்கள் படப்பிடிப்பு அங்கு நடக்கும் நிலையில் அடுத்து காஷ்மீரில் முழுமையாக படத்தை எடுக்க லோகேஷ் முடிவு செய்துள்ளார். 

Share this story