"செஃப் ஆக வேண்டும் என்று தனுஷ் நினைத்தார் "-செல்வராகவன்

dhanush

ஜி.வி.பிரகாஷ் குமார், மாதுரி ஜெயின் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கியபடி பல படங்களில் நடித்து வரும் செல்வராகவன் கூறுகையில், ‘நான் முன்கூட்டியே திட்டமிட்டு நடிக்க வந்தவன் கிடையாது. ஒரு விபத்து போல் திடீரென்று நடிகனாகிவிட்டேன். எனது குடும்​பத்​தில் இருந்து, சினிமாவில் நடிக்​க வேண்டும் என்று யாருமே திட்​ட​மிட்டு வரவில்லை. அந்த வாய்ப்பு தானாக அமைந்தது​தான். செஃப் ஆக வேண்டும் என்று தனுஷ் நினைத்தார். அவரை நான்தான் கட்​டாயப்​படுத்​தி ‘துள்​ளுவதோ இளமை’ படத்​தில் ஹீரோவாக நடிக்க வைத்தேன்.

நான் அமெரிக்காவுக்கு சென்று, உயர்ந்த படிப்பை மேற்கொள்ள நினைத்தேன். ஆனால், என் குடும்ப சூழ்​நிலையின் காரண​மாக நடிக்க வந்​துவிட்டேன். நான் நடித்தே ஆக வேண்டுமா என்று தனுஷிடம் கேட்​டேன். ‘எப்​படி ஒரே நேரத்​தில் பல வேலைகள் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ரொம்ப சாதாரணமாக, ‘நமக்கு வேற என்ன தெரி​யும்?’ என்று, ஒரே வார்த்​தை​யில் பதில் சொல்லி முடித்துவிட்​டார். அது மிகவும் நியாய​மான பதிலாக இருந்​தது. அதனால், உடனே என்னை அப்​படி மாற்றிக்கொண்​டேன்..

Share this story