தளபதி68 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

தளபதி68 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

விஜய் நடிக்கும் 68-வது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. 

‘லியோ’ படத்தை முழுவதும் முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.  ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது

தளபதி68 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. 5 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்றும், இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

Share this story