ஜிகர்தண்டா படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியானது

ஜிகர்தண்டா படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியானது

சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’ இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது. தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் தற்போது தயாராகியுள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்குகிறார். மேலும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு இத்திரைப்படம் வௌியாகிறது.

இந்நிலையில், படத்திலிருந்து இரண்டாவது பாடல் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது . ஏற்கனவே ஒரு பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story