லியோ படத்தால் ஏற்பட்ட நெரிசல்... ரசிகர்கள் மீது அபராதம் விதிப்பு...

ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த லியோ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பலரும் படத்தை பார்க்க தியேட்டர் முன்பு கூடி வெடி வெடித்து படத்தை வரவேற்றனர். இந்த நிலையில் சென்னையியல் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்துள்ளார் படத்தின் இயக்குநரான லோகேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்.
இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் விஜய் ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் நேரம் என்பதால், வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. திரையரங்கிற்குள் காலை 8.30 மணிக்கு பிறகே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, அவர்கள் தாங்கள் வந்த டூ வீலர்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், விதிகளை மீறி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட விஜய் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.