'கத்தி' பட வில்லனுக்கு வந்த சோதனை... நினைவுகளை பகிர்ந்த நீல் நிதின் முகேஷ்...!

பாலிவுட்டில் பிரபலமான நடிகர் நீல் நிதின் முகேஷ். இவரது தாத்தா முகேஷ் பிரபலமான பாடகர். அப்பா நிதினும் பாடகர். இப்படி சினிமாவில் பிரபலமாக நடிகராக நிதிஷ் அறியப்படுகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு வெளியான விஜயின் ’கத்தி’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்த நிலையில், இந்தியர் என்பதை சொல்லியும் கேட்காமல் 4 மணி நேரம் நியூயார்க் காவல்துறையினர் காவலில் வைத்திருந்த சம்பவத்தை நீல் நிதின் முகேஷ் மிகவும் வருத்தத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும் போது:- நான் 'நியூயார்க்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம். பார்ப்பதற்கு இந்தியர் போல இல்லை, போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவில் நுழைந்ததாக குற்றம்சாட்டி நியூயார் விமான நிலையத்தில் காவலர்கள் சிறைபிடித்தனர். எதைச் சொல்லியும் கேட்காமல் 4 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர். 4 மணி நேரத்துக்குப் பின் அவர்கள் என்னிடம் வந்து, 'என்ன சொல்ல போகிறாய்?' எனக் கேட்டனர். அதற்கு நான் ’என்னைப் பற்றி கூகுளில் தேடிப் பாருங்கள்' என்றேன். அதன் பிறகே விடுவிக்கப்பட்டேன்" என்றார்.