வெடிக்கும் இஸ்ரேல் போர்.... இந்தியா திரும்பும் விடாமுயற்சி படக்குழு...

வெடிக்கும் இஸ்ரேல் போர்.... இந்தியா திரும்பும் விடாமுயற்சி படக்குழு...

படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்ற விடாமுயற்சி படக்குழுவினர், இஸ்ரேல் -  பாலஸ்தீனிய போர் காரணமாக இந்தியா திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.  கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ப்ரீ பிரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதேநேரம் அஜித்தும் தனது பைக் பயணத்தை தொடங்கி சென்றுக் கொண்டிருந்தார். அதனால் படத்தை லைக்கா கைவிடவுள்ளதாக தகவல் வெளியானது. 

வெடிக்கும் இஸ்ரேல் போர்.... இந்தியா திரும்பும் விடாமுயற்சி படக்குழு...

இதைத்தொடர்ந்து, பைக் பயணம் முடிந்து நடிகர் அஜித் சென்னை திரும்பினார். சிறிய இடைவௌிக்கு பின்னர் அஜித், த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜர்பைஜான் பறந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் போர் தீவிரமடைந்து உள்ளதால் அச்சுறுத்தல் காரணமாக படக்குழுவினர் மீண்டும் இந்தியா திரும்புவதாக கூறப்படுகிறது. 
 

Share this story