அருள்நிதியின் மிரட்டலான நடிப்பில் ‘திருவின் குரல்’.. டிரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பு !

ThiruvinKural

அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘திருவின் குரல்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் மிக வித்தியாசமாகவும், ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘டி பிளாக்’, ‘தேஜாவு’, ‘டைரி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

ThiruvinKural

இந்த படங்களின் வெற்றிக்கு பிறகு ‘ராட்சசி’ படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்திலும், அறிமுக ஹரிஷ் பிரபு இயக்கத்திலும் நடிகர் அருள்நிதி நடித்து வருகிறார். இதில் லைக்கா தயாரிப்பில் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரைப்படம் ‘திருவின் குரல்’. இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து முன்னணி இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். சின்டோ போதுதாஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் திங்கட்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மிரட்டலான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story