பதிவியை ராஜினாமா செய்த 'திருப்பூர் சுப்பிரமணியம்'- என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட திரையரங்க உரிமையாளரார்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மா.சுப்பிரமணியம் என்ற இவரை திருப்பூர் சுப்பிரமணியம் என அழைத்து வந்தனர். இவர் சக்தி சினிமாஸ் எனற தியேட்டரையும் நடத்தி வருகிறார். கட்டுபாட்டை மீறி டைகர்3 படத்தை காலை 7மணிக்கு திரையிட்ட விவகாரத்தில் சிக்கிய இவரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட நிவாகம் நோடீஸ் அனுப்பியிருந்தது அதற்கு சுப்பிரமணியம் என்ன பதில் அளிப்பார் என எதிர்பார்த்திருந்த வேளையில் தனது ராஜினாமா கடிதத்தை அவர் கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் தனது சொந்த வேலை காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது திரைத்துரையை சார்ந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.