`டூரிஸ்ட் ஃபேமிலி' வெற்றி... சம்பளம் குறித்து மேடையில் ஓபனாக பேசிய சசிகுமார்..

sasikumar

`டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில், தனது சம்பளத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என சசிகுமார் தெரிவித்துள்ளார். 


அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம்  ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ . தமிழகத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மாபெரும் வசூல் வெற்றி பெற்றிருக்கிறது. அதன்முலம் சசிக்குமார் படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக இது மாறியுள்ளது. `டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

அந்நிகழ்வில் பேசிய சசிகுமார், "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி அடைந்ததால் என்னுடைய சம்பளத்தை ஏற்றிவிடுவீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். சம்பளம் ஏறாது. அதே சம்பளம்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. இதை என்னுடைய வெற்றியாக நான் நினைக்கவில்லை. சசிகுமார் ஜெயித்து விட்டார், தயாரிப்பு நிறுவனம் ஜெயித்து விட்டது என்று நினைக்காதீர்கள். புது இயக்குநர்களுக்கும், தோல்வி அடைந்த இயக்குநர்களுக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது இந்தப் படம்.sasikumar

நாம் தோல்வி அடைந்தால், ஆமாம் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்று அந்தத் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். எனது தோல்வியை ஒவ்வொரு முறையும் நான் ஒத்துக்கொண்டேன். இந்தப் படம் வெளியான முதல் நாள் கிட்டத்தட்ட இரண்டரைக் கோடிதான் வசூலித்தது. என்னுடைய ஒரு படம் மொத்தமாகவே இரண்டரைக் கோடிதான் வசூல் செய்தது. ஆக என்னுடைய ஒரு படம் இரண்டரைக் கோடிக்கும் ஓடி இருக்கிறது.sasikumar

இன்னொரு படம் பல கோடிக்கும் ஓடி இருக்கிறது. நான் நடித்த படங்களில் 'சுந்தர பாண்டியனும்', 'குட்டிப்புலியும்'தான் அதிக வசூல் செய்த படங்கள். ஆனால் இன்று இந்த `டூரிஸ்ட் ஃபேமிலி' படம் அதனை முறியடித்திருக்கிறது. அதனால் இனி வருபவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுங்கள். 'சுந்தர பாண்டியன்' படத்தில் உங்களை எல்லோருக்கும் எப்படிப் பிடித்ததோ அதேபோல இந்தப் படத்தில் வரும் தர்மதாஸ் கதாபாத்திரமும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொன்னார்கள்.அதே மாதிரி நான் தியேட்டருக்குச் சென்று பார்த்தபோது நல்ல வரவேற்பு இருந்தது. நல்ல படம் கொடுத்தால் குடும்பத்துடன் தியேட்டருக்கு மக்கள் வருவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன்" என்று கூறினார்.

sasi

மேலும், சிம்ரன் மேடம் உடன் பணிபுரிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இங்கு வந்ததற்கும், எங்கள் மொழியைக் கற்றுக்கொண்டதற்கும், பல படங்களில் நடித்ததற்கும் அவருக்குத் தகுதியான மரியாதையை வழங்குவதில் நாங்கள் அனைவரும் குறிப்பாக ஆர்வமாக இருந்தோம். நாங்கள் அவரை ஒரு ராணியைப் போல நடத்த விரும்பினோம், மேலும் நாங்கள் அவரை அப்படி நடத்தினோம் என்று நம்புகிறோம் `டூரிஸ்ட் ஃபேமிலி' எங்கள் வெற்றி அல்ல. இது தமிழ் சினிமாவின் வெற்றி என்று நான் கருதுகிறேன். இன்னும் பல குடும்பப் படங்கள் வர வேண்டும் என பேசினார். 

Share this story