ஒரே நாளில் வெளியாகும் காதல் தம்பதியின் இரு வேறு திரைப்படங்கள்

ஒரே நாளில் வெளியாகும் காதல் தம்பதியின் இரு வேறு திரைப்படங்கள் 

கணவன் மனைவியான அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.

ஒரே நாளில் வெளியாகும் காதல் தம்பதியின் இரு வேறு திரைப்படங்கள் 

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வருபவர் அசோக் செல்வன்.  ‘ஓ மை கடவுளே’,  ஹாஸ்டல், மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதுதரவி புதிய இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ள அவர், அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் அசோக் செல்வன் நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகிறது.

ஒரே நாளில் வெளியாகும் காதல் தம்பதியின் இரு வேறு திரைப்படங்கள் 

அதே நாளில், அசோக் செல்வனின் மனைவியும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள கண்ணகி திரைப்படமும் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனுடன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். பருத்தி வீரன் ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரகுமான் இசை அமைக்கிறார். ஷாலின் ஜோயா படத்தை இயக்கியுள்ளார். 

Share this story