விரைவில் வெளியாகும் ‘கண்ணை நம்பாதே’... உதயநிதி படத்தின் முக்கிய அறிவிப்பு !

KannaiNambathe

 உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அரசியலில் பிசியாக விட்ட உதயநிதி, கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்தார். அதற்கு ‘கலகத்தலைவன்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார். இதில் ‘கலகத்தலைவன்’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ‘கண்ணை நம்பாதே’ படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது. 

KannaiNambathe

உதயநிதியின் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பூமிகா, சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஒரு குற்றம் நடைபெறுகிறது. அந்த குற்றத்திற்கு பின்னால் இருக்கும் எமோஷ்னல் கதைதான் இந்த படம். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story