கடைசிவரை கேப்டனை வந்து பார்க்காத வடிவேலு

கடைசிவரை கேப்டனை வந்து பார்க்காத வடிவேலு

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவ்டடங்களில் இருந்து பல லட்சம் பேர் திரண்டு வந்துள்ளனர். திரையுலகினர் அரசியல் பிரபலங்கள் என பலர் தேமுதிக அலுவலகத்திலும், தீவுத்திடலிலும் வந்து விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால், நகைச்சுவை நடிகர் வடிவேலு விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்த வரவில்லை. 

கடைசிவரை கேப்டனை வந்து பார்க்காத வடிவேலு

வடிவேலுவும், விஜயகாந்தும் நல்ல நட்புடன் பழகி வந்தனர். இவர்கள் இரவரின் வீடுகளும் சாலிகிராமத்தில் இருந்ததாகவும், அப்போது வடிவேலு தனது காரை விஜயகாந்த் வீட்டின் முன்பு நிறுத்தியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. மேலும், விஜயகாந்த் நடிகர் சங்கத்தலைவராக இருந்த போது, சங்க கூட்டத்திற்கு அழைத்தால் வடிவேலு வராமல் இருந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கடைசிவரை கேப்படன் விஜயகாந்தை பார்க்க வரவில்லை நடிகர் வடிவேலு. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், வடிவேலு வந்தால் அவரை விஜயகாந்த் ரசிகர்கள் எதிர்ப்பார்கள் என்றும், அவர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. 

Share this story