‘வணங்கான்’ முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு... பாலா படத்தின் முக்கிய அப்டேட்

vanagaan

 பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குனரான பாலா, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை இயக்கி வந்தார். ஆனால் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் நடிகர் அருண் விஜய்யை  வைத்து மீண்டும் ‘வணங்கான்’ படத்தை இயக்குனர் பாலா தொடங்கினார். 

vanagaan

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே ஒப்பந்தமான கீர்த்தி ஷெட்டி விலகிய நிலையில் கன்னட நடிகை பிரபல கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தமிழில் அவர் 'ஜடா', ஏமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்

மீனவர் கதைக்களம் கொண்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் செட் அமைக்கப்பட்டு கடந்த மாதம் தொடங்கியது. இதில் அருண் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவுபெற்றது. இதையடுத்து விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

 

Share this story