விக்ரம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட 'வீர தீர சூரன்' பட இயக்குனர் அருண்குமார்...!

arunkumar

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீரன் சூரன்’ திரைப்படம் மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இயக்குனர் அருண் குமார் அனைவரிடமும் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். 

விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் முதலில் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு பின்பு முதல் பாகத்தை வெளியிடலாம் என்ற வித்தியாசமான பிளானில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

vikram
 இப்படம் இன்று(27.03.2025) வெளியாகவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று(26.03.2025) இப்படத்திற்கு எதிராக படத்தில் முதலீடு செய்துள்ள பி4யூ(B4U) என்ற தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து வழக்கு காரணமாக படத்தை வெளியிட 4 வாரம் தடை விதித்து டெல்லி உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டபடி திரைப்படம் வெளியாகவில்லை. இதனையடுத்து, இவ்வழக்கு விசாரணையில்  படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரியா ஷிபு நேரில் ஆஜராகி பி4யூ நிறுவனத்துக்கு மூன்று நாட்களுக்குள் படத்தின் சாட்டிலைட் தொடர்பான அனைத்து உரிமைகளையும் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் படத்தை வெளியிட அனுமதி வழங்கிய நீதி மன்றம் இரு தரப்பும் எழுத்துப் பூர்வமான பிரமான பத்திரத்தை மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி பத்திரத்தை தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.     


 இதனையடுத்து, படத்தின் இயக்குனர் அருண்குமார் அனைவரிடமும் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், படம் தொடர்பான பிரச்சனையில் ரசிகர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதால் சியான் விக்ரம் ரசிகர்கள் அனைவருக்கும் மன்னிக்க வேண்டும் எனவும், இந்த சூழ்நிலையில் உறுதுணையாக இருந்த நண்பர்கள் ரசிகர்கள், திரை உலக  எனவும் தெரிவித்துள்ளார். 

Share this story

News Hub