பிரபல நடிகர் ரவிக்குமார் மரணம்...!

நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்
கே.பாலச்சந்தரின் 'அவர்கள்', 'பகலில் ஒரு இரவு' படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உள்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார் (வயது 71). கேரளாவை சேர்ந்தவர் நடிகர் 'அவர்கள்' ரவிக்குமார்(71). இவர் 70-களில் பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். 'உல்லாச யாத்ரா' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழிலும் சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
அதன்பிறகு மலபார் போலீஸ், ரமணா, மாறன், விசில், சிவாஜி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள திரை உலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.