வைரலாகும் ‘வேட்டையன்’ பட ஷூட்டிங் கிளிக்ஸ்.
![photo](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/62255aeed5eecf044cfac34a933d5e00.jpeg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகிவரும் ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்தும்- ஃபகத் பாசிலும் ஒரே ஃபிரேமில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- த.செ ஞானவேல் கூட்டணியில் தயாராகிவரும் தலைவரின் 170 படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், ஃபகத் பாசில், ரித்திகா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு கேரளா, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினிகாந்தும்- ஃபகத் பாசிலும் ஒரே ஃபிரேமில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இருவரும் ஒரு கரும்பலகைக்கு முன்னால் நிற்கின்றனர். அந்த கரும்பலகையில் அன்னை தெரசாவின் வசனம் எழுதியுள்ளது. அதாவது “ வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.