திட்டமிட்டபடி வெளியாகும் 'பிச்சைக்காரன் 2'... சிக்கல் தீர்ந்ததால் மகிழ்ச்சியில் விஜய் ஆண்டனி !

pichaikaran 2

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'பிச்சைக்காரன் 2' படத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இந்த படத்தை அவரே தயாரித்து இயக்கியுள்ளார். அதாவது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

pichaikaran 2

 ஆனால் இப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை. இதற்கு காரணம் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடைக்கோரி மாங்காடு மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜ கணபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆய்வுக்கூடம்’ திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பயன்படுத்தியுள்ளார். 

அதனால் இந்த படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், அதற்கு இழப்பீடாக 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 'பிச்சைக்காரன் 2' படத்தை வெளியிட அனுமதி அளித்தது. அதேநேரம் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. அதனால் வரும் மே 19-ஆம் தேதி திட்டமிட்டபடி 'பிச்சைக்காரன் 2' படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. 

Share this story