‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடையா ?... விஜய் ஆண்டனி படத்திற்கு வந்த சிக்கல் !

pichaikkaran 2

 விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஆன்ட்டி பிகிலி கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

pichaikkaran 2

இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடைக்கோரி மாங்காடு மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜ கணபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆய்வுக்கூடம்’ திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பயன்படுத்தியுள்ளார். 

அதனால் இந்த படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், அதற்கு இழப்பீடாக 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை விதிக்கப்படுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

 

Share this story