விரைவில் நிறைவுபெறும் 'லியோ' ஷூட்டிங்... அடுத்த படத்திற்கு தயாராகும் விஜய் !

leo

 விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் இறுதிககட்ட படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. 

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறது ‘லியோ’. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேகமாக பணியாற்றி வருகிறார். 

 leo

முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கிய நிலையில் அங்கு விஜய், திரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிரிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த படத்திற்காக பணியாற்றியுள்ளனர். மொத்தம் 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றது.

இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஜதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் இறுதியுடன் நிறைவுபெற உள்ளது. இதையடுத்து உடனடியாக தயாரிப்புப் பணிகள் தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

Share this story