செம்ம சண்டை.. ரத்தம்.. 'தளபதி 67' குறித்து மிஷ்கின் கொடுத்த சூப்பர் அப்டேட் !

thalapathy 67

'தளபதி 67' படம் எப்படி உருவாகிறது என்பது குறித்து சுவாரஸ்சிய தகவல்களை இயக்குனர் மிஷ்கின் வெளியிட்டுள்ளார். 

'வாரிசு' படத்திற்கு பிறகு 'தளபதி 67' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷா, சஞ்சத் தத், அர்ஜூன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். தற்போது இந்த படத்தின் ப்ரோமோ ஷூட்டிற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

thalapathy 67

இந்நிலையில் 'தளபதி 67' படத்தில் தற்போது இயக்குனர் மிஷ்கின் பணியாற்றி வருகிறார். படப்பிடிப்பில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்களை மிஷ்கின் பகிர்ந்துள்ளார். அதில் விஜய்யுடன் சண்டையிட்டு தான் தற்போது வந்துள்ளேன். விஜய்யுடன் எனது முதல் படம் 'யூத்'. 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். 

விஜய் கொஞ்சமும் மாறவில்லை. அதே இளமையுடன், ஹேன்ட்ஸமாக இருக்கிறார். அன்று எப்படி என்னை அண்ணா அழைத்தாரோ, அப்படிதான் இன்றுவரை அழைக்கிறார். படப்பிடிப்பில் செம்மையாக சண்டையிட்டோம். ரத்தம் வரமளவிற்கு அடித்துக்கொண்டோம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அருமையாக படத்தை இயக்கி வருகிறார். தேவையில்லாமல் எதையும் எடுப்பதில்லை. நடிப்பை அவர் சொல்லி தருவதில்லை. அவர் இயக்குவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது‌ என்று கூறினார்.

 

Share this story