நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்... விஷாலின் 'மார்க் ஆண்டனி' படக்குழுவின் அதிரடி அறிவிப்பு !

mark antony

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இரண்டு காலக்கட்டங்களில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். முதல் முறையாக டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

mark antony

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story